1. ஒகியோ மாகாணத்தின் பால்டிங் நகரில் குரைக்கும் நாயை அடக்க சட்டப்படி போலிஸ்காரர் நாயை அடிக்கலாம்.
  2. நியூ யார்க் மாகாணத்தில் கரமெல் பகுதியில் பொருத்தமற்ற ஜக்கெட் ,பேன்ட் அணிந்து வெளியே செல்லக் கூடாது.
  3. கெண்டகி மாகணத்தில் கோர்ர்ன் ஐஸ்கிரிமை சட்டைப் பையில் கொண்டு செல்வது தடை செய்யப்படடுள்ளது.
  4. மசாசு செட்ஸ் பகுதியில் உள்ள நாய்கள் அனைத்துக்கும் ஏப்ரல் மாதத்தில் பின்னங்கால்கள் இரண்டும் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
  5. மிச்சிகன் பகுதியில் பெண்ணின் தலை முடி கணவனுக்கு சொந்தம், எனவே கணவனின் சம்மதமின்றி முடி வெட்டி கொள்ளக்கூடாது.
  6. சால் வாடர் மாகாணத்தில் மது அருந்திவிட்டு கார் ஓடுபவர்களுக்கு மரண தண்டனை கூட வழங்கப்படலாம்.
  7. புளோரிடா மாகாணத்தில் கன்னிப் பெண்கள் ஞாயிற்று கிழமைகளில் பாரசுடிலிருந்து குதிப்பது சட்ட விரோதமானது
  8. வாகனம் ஓட்டும்போது ஓட்டுனர்கள் ,கண்களை கட்டிக்கொண்டு ஓட்டுவது அலபாமா மாகாணத்தில் குற்றமாகும்.
  9. வெர்மான்ட் மாகாணத்தில் பெண்கள் பல்செட் அணிய கணவனின் அனுமதி பெற வேண்டும் .
  10. ஒகியோ மாகாணத்தில் ஆக்ஸ்போர்ட் நகரில் ஒரு பெண் ஆணின் படத்துக்கு எதிரே ஆடைகளை களைவது சட்டவிரோய்தமானது .
  11. நியூ ஜெர்சி மாகாணத்தில் 'கிராஸ் ஹில் ' பகுதியில் வசிக்கும் பூனைகளின் கழுத்தில் மூன்று மணிகள் கட்டியிருக்க வேண்டும்.(பறவைகள் தெரிந்து கொள்வதற்காக )
  12. அலக்சாண்டிரியா மாகாணத்தில் மின்ன சோடா பகுதியில் கணவனின் வாயில் துர்நாற்றம் வீசினால் ,மனைவியோடு உறவு கொள்ள முடியாது. வாயை சுத்தப்படுத்தி கொண்டு வரும்படி கணவன் மீது மனைவி சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
  13. பெனிசில்வேனியா மாகாணத்தில் மனைவியின் எழுத்துபூர்வ ஒப்புதலின்றி மது வாங்க முடியாது.
  14. லிவர்பூல் மாகாணத்தில் பொது இடத்தில் பெண் மேலாடை இல்லாமல் இருப்பது சட்ட விரோதமானதாகும். ஆனால் மீன் அங்காடியில் உள்ள பெண்களுக்கு மட்டும் விதிவிலக்கு.
  15. டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் இரயில் பாதையில் இரண்டு இரயில்கள் சந்தித்தால் இரண்டும் நின்று, பிறகு புறப்பட்டு செல்லும் .
  16. பிரிட்டிஷ் கடற்படையை சேர்ந்த கப்பல்கள் லண்டன் துறைமுகத்தில் நுழையுமானால் 'டவர் ஒப் லண்டன் ' எனும் மாளிகையில் பணிபுரியும் காவலர்களுக்கு சட்டப்படி , ஒரு பீப்பாய் 'ரம்' மது வழங்க வேண்டும்.
  17. செஸ்டர் மாகாணத்தில் வேல்ஸ் நாட்டு மக்கள் சூரிய உதயத்திற்கு முன்னும் அஸ்தமனத்துக்கு பின்னும் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது .
  18. இங்கிலாந்தில் பாராளுமன்றத்தில் இறப்பது சட்ட விரோதமானது.
  19. சனிக்கிழமைகளில் மூக்கை குடைவது இஸ்ரேல் நாட்டில் சட்ட விரோதமானது.
  20. கோழிகள் , வெள்ளி அல்லது சனிக்கிழமைகளில் முட்டையிடுவது இஸ்ரேல் நாட்டில் சட்ட விரோதமானது.
  21. பிரிட்டிஷ் கடற்படையில் தட்டுப்படும் திமிங்கிலங்கள் சட்டப்படி அரசுக்கு சொந்தமானவை , அவற்றின் வால் ராணிக்கு சொந்தம்.
  22. இங்கிலாந்தில் மன்னர் பரம்பரையினரின் தபால் தலையை தலைகீழாக ஒட்டுவது இராஜத்துரோக குற்றத்துக்கு ஒப்பானதாகும்.
  23. பிரான்ஸ் நாட்டில் பன்றியை 'நெப்போலியன் ' என்று பெயர் வைத்து அழைப்பது சட்ட விரோதமானதாகும்.
  24. தாய்லாந்து நாட்டில் மக்கள் உள்ளாடை இல்லாமல் வெளியே செல்வது சட்ட விரோதமானதாகும்.
  25. டென்மார்க் நாட்டில் ஒரு புதுமையான சட்டம்,சிறையிலிருந்து தப்பி செல்வது சட்ட விரோதமானதல்ல ...ஆனால் பிடிபட்டால் எஞ்சிய கால தண்டனையை சிறையில் கழித்த பின் தான் விடுவிக்கப்படுவார்கள்.
  26. சுவிஸ்சர்லாந்து நாட்டில் அடுக்கு மாடி கட்டிடங்களில் வசிப்பவர்கள் இரவு பத்து மணிக்கு மேல் , கழிப்பறையில் தண்ணீரை திறந்து சப்தம் ஏற்படுத்த கூடாது.

நன்றி : தேன்தமிழ்:::



இன்றைக்கு ஒரு லாஜிக்கலான புதிர். உங்கள் முன் இரண்டு பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் எப்பொழுதும் உண்மையே பேசுவார், இன்னொருவர் எப்பொழுதும் பொய்யே பேசுவார், என்பது மட்டும் உங்களுக்கு சொல்லப்படுகிறது. ஆனால், யார் உண்மை பேசுபவர், யார் பொய் பேசுபவர் என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் அந்த இருவரில் யாராவது ஒருவரிடம், ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க அனுமதிக்கப்படுகிறீர்கள். அதன் மூலம் யார் உண்மை பேசுபவர், யார் பொய் பேசுபவர் என்று கண்டு பிடிக்க வேண்டும். அப்படியானால் உங்களது கேள்வி என்னவாக இருக்கும்?

ஆமாம், லாஜிக்கு என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை என்ன ????



தேவர்கள், அசுரர்கள்னு புராணங்களில் படித்துள்ளோமே, இன்று அவர்கள் எல்லாம் எங்கே???
எனக்கு தெரிந்த வகையில் ஒரு சின்ன விளக்கம்:
சத்ய யுகம்/கிருத்த யுகம்:அசுரர்கள் பாதாள உலகிலும் தேவர்கள் மேலுலகிலும் மனிதர்கள் பூலோகத்திலும் வாழ்ந்தனர்.
திரேதா யுகம்:ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி வாழ்ந்த யுகம். அசுரர்களும், தேவர்களும் பூமியின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.ராமர் அயோத்தியுலும் ராவணன் இலங்கையிலும் வாழ்ந்தனர்.
துவாபர யுகம்:பகவான் கிருஷ்ணன் வாழ்ந்த யுகம்.அசுரர்களும் தேவர்களும் ஒரே குடும்பத்தில் வாழ்ந்தனர்.கிருஷ்ணர்-கம்சன்/சிசுபாலன்.
கலி யுகம்:அசுரர்களும் தேவர்களும் ஒரே மனிதனுக்குள் வாழ தொடங்கிவிட்டனர்.சில நேரம் நாமே தேவராகி அடுத்தவர் கஷ்டப்படும் போது உதவுவோம். நம்மை வருத்தப்படுத்தி அடுத்தவருக்காக உதவும் அந்த சில நேரங்களில் நாம் தேவராகிறோம்.ஒரு சில நேரங்களில் நாமே நமது சுய நலத்திற்காக பிறரை கஷ்டப்படுத்தி அசுரராகிறோம்.சில நேரங்களில் உதவ முடியாமல் மனதளவில் வருத்தப்பட்டு மனிதனாகி நிற்கிறோம்…
ஏதோ என்னளவில் தோன்றிய ஒரு விளக்கம்.


இதற்கு ஜீவன்களின் கருமையம் பற்றிய விளக்கம் பெற்றிருத்தல் தகுதியாகும். கருமையம் என்பது ஒவ்வொரு ஜீவனுக்கும் அதன் உடலின் மையத்தில் அமைந்திருக்கும். இது கணினியின் Hard Disk - ஐ போன்றது. அதுபோலவே பணிபுரியவும் செய்யும். அதன் வெளியீடே ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண்பாலுக்கு விந்தணுவாகவும், பெண்பாலுக்கு முட்டையாகவும் வெளிப்படும். இவை இணைந்தே இன்னொரு உயிர் தோன்றும். இதன் பதிவுகளுடன் கூடிய வெளியீட்டினை நவீன மருத்துவம் ஜீன்கள் என்றழைக்கிறது.அப்படிப்பட்ட மகத்தான சக்தி படைத்த கருமையத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், துய்க்கும் ஒவ்வொரு செயலும் பதிவாகிக்கொண்டே இருக்கிறது. எப்படி ஒரு மாட்டினை பார்த்தபார்வையில் அது மனதில் பதிந்து எவரேனும் மாடு என்ற உடன் அது விரைவாக மனதில் உருவம் பெறக்கூடிய அதிசயம் நடக்கிறது? சிந்திப்பீர். உங்கள் ஒவ்வொரு அனுபவமும் அலை வடிவத்தில் மாற்றம்பெற்று சுருக்கம்பெற்று கருமையத்தில் பதிந்து நீங்கள் நினைக்கும்நொடியில் அது உருவமும் அல்லது அந்த அனுபவம் அதே தன்மைகளுடன் உங்களுக்கு உள்ளுணர்வாக மலரும்.இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். ஆடு, மாடு, கோழி போன்ற உயிரிணங்களுக்கும் 5 உணர்வுகள் உண்டு. அவை அனைத்தையும் கருமையத்தில் சேமித்துக்கொண்டே வரும். பலியிடப்படும் உயிரின் கடைசி மரண உணர்வுகளும் கருமையத்தில் பதிவாகும். அதே வேகத்தில் அதன் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பதிவாகும். நீங்கள் அந்த உணர்வுள்ள உயிரிணத்தினை புசிக்கும்போது அந்த பதிவுகள் நீக்கம் பெற்றிருக்காது. ஏனெனில் அனைத்தும் அலைவடிவிலேயே இருக்கும். அதன் காரணமாக அவற்றின் பதிவுகள் உங்களுள்ளும் இறங்கி பாவப்பதிவாக உங்கள் கருமையத்திலும் பதிவாகும்.இப்பொழுது புரிகிறதா பெரியவர்களின் பொன்மொழி கொன்றால் பாவம் தின்றால் போச்சு (உங்கள் கருமையத்திற்குள் போச்சு).ஆனால் மரம் செடி கொடிகளும் உயிர்னம்தானே என்று சிந்திக்கலாம்.மரத்தின் கருமையம் வேராக இருக்கிறது. நீங்கள் காய்கனிகளை பறிக்கும்போது அந்த மரத்தின் வேதனையானது கருமையத்தில் இறங்கும். அதுவும் பூமியோடு தொடர்புகொண்டிருப்பதால் உடனடியாக பூமிக்கு கடத்தப்படும்(எர்தாகிவிடும்). கீரையை வேரோடு பிடுங்கும்போதும் அது தன் உணர்வுகளை உடனடியாக பூமிக்கு கடத்திவிடுகிறது. எனவே சைவ உணவு வகைகளின் உணர்வுகள் பூமிக்கு கடத்தப்படுவதால் பாவ பதிவுகள் அதை சுவைப்பவர்களுக்கு ஏற்படுவதில்லை. பூமியும் ஒரு உணர்வற்ற பொருள் என்பதால் அந்த துன்ப அலைக்கு மதிப்பு நடுநிலைப்படுத்தப்படுகிறது.இதுதான் சைவ உணவை நம் நாட்டு அறிவியலறிஞர்கள் வேதங்களில் எழுதியும், நம் வாழ்க்கை கலாச்சாரத்தில் மறைமுகமாக புகுத்தியும் வைத்திருப்பதன் காரணமாகும். காலப்போக்கில் பல்வேறு அந்நிய படையெடுப்புகள் மற்றும் நாகரீக சிந்தனை என்கிற பெயரில் புறப்பட்டவர்களின் பிரசாரங்களாலும் இந்த காரணம் நம்மிடமிருந்து காணாமல் போய்விட்டது.மரத்தின் கருமையம் விதைகளில் இருக்கிறதே என்று சந்தேகம் தோன்றலாம். விதைகளில் மரத்தின் கருமையம் இருப்பின் மரம் விதை நீக்கம் பெற்ற உடன் மரணித்துவிடும். அதே நேரத்தில் ஒரு உயிரிணத்திற்கு ஒரு கருமையம் மட்டுமே இயற்கையில் அமையும்.இதற்கு டெஸ்ட் ட்யூப் பேபி உதாரணம் மூலம் விளக்கமளிக்க முயல்க்கிறேன். ஆணின் கருமையம் விந்துவிலும், பெண்ணின் கருமையம் முட்டையிலும் இருப்பதாக கொண்டால் அவர்கள் விந்துவையும், முட்டையினையும் வெளியில் சோதனைக்குழாயில் இணைக்க மனித உடலிலிருந்து வெளியே எடுத்தால் உடனே மனிதன் இறந்துவிடுவான். ஆனால் ஏன் மரணிக்கவில்லை, மனிதனின்(ஆண் பெண் இருபாலரையும் குறிப்பதாக கொள்ளவும்) சாரமான விதையை மட்டுமே(அதாவது மனித ஜீன்களை - தன்மைகளை) உபயோகித்து சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்குகின்றனர். இதனால் மனிதன் மரணிப்பதில்லை. அதுபோலதான் விதைக்கும் வேருக்கும் உள்ள தொடர்பும் கருதப்படவேண்டும்.


எப்படியோ ரொம்ப நாளா யோசிச்சி ஒரு பிளாக் ஆரம்பிச்சாச்சி.என்ன எழுதலாம்னு சிந்திச்சா ஒன்னுமே வரமாட்டேங்குது.குணால கமல் சொல்ற மாதிரி -பிளாக் எழுத ஆரம்பிக்கும் பொழுது ஐடியா மனசுல அருவியா கொட்டுதுஅதை எழுதனும்னு உட்கார்ந்தா அந்த எழுத்து தான்…….வார்த்தை …..னுபாட வேண்டியதுதான்னு யோசிச்சி, அதையே எழுதுவோம்னு எழுதிட்டேன்.