நீங்கள் stress ல் இருந்து விடு பட வேண்டுமா ???

கீழே உள்ள உடற்பயிற்சிகளை ஒவ்வொரு ரெண்டு மணி நேரத்திற்கும் செய்யுங்கள்
















கேட்கிறாயே பெண்ணே!


என்னையே விலையாக கேட்கிறாயே???


இருளில் அலைந்தேன்,


நீரில் மிதந்தேன்,


பயமில்லாமல்,


உன்னுள் இருக்கும் வரை.


என் உடல்,


என் உயிர்,


என் உணவு,


எல்லாம் கொடுத்தாய்,


நான் பெண் என்று அறியும் வரை.


எல்லாம் கொடுத்துவிட்டு,


என்னையே விலையாக கேட்கிறாயே!


நீயும் பெண் என்பதை மறந்தாயோ?


சமூகம் கேட்கும்,'ஆயிரம் கேள்விகள்'


அனைத்தும் பதில் சொல்லத் தகுதியற்றவை!


உன்னால் உருவாகி,


உன்னுள் வடிவாகி,


உன்னிடம் பிறப்பதால்


நான்,


உன்னுடையவள் அல்ல,


என் உயிர்


என் உரிமை மட்டுமே.


உன் கருவறை,


என் கல்லறையாகி விட வேண்டாம்.


தூணிலிருந்து வெளிபட்ட தர்மம்


அதர்மத்தை அழித்ததுப் போல்,


உன்னிலிருந்து வெளிப்பட்டு


நான் அழிப்பேன்


இந்த சமூக அவலங்களை.


என்னை பிறக்க விடு.




1. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி வரும் பந்தும் அல்ல அது என்ன?
2. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
3. மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?
4. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்கும், அது என்ன?
5. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து, அது என்ன?
6. வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்?
7. எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன?
8. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
9. உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன், அவன் யார்?
10.மழை காலத்தில் பிடிப்பான், அவன் யார்?



தாயின் ஸ்பரிசம்..

விலைமதிக்க முடியாத
பரிசு..
ஆனால் அம்மா...
உன்னையின்றி நான் வாடுகிறேன்..
என்னைப் புரிந்து கொள்வாயா ?