மேகம் திரண்டு
வானம் மூடி
இடி இடித்து
மின்னலோடு
வந்த மழை
பூமியை
குளிர்வித்து
வானத்தையும்
சுத்தமாக்கும்...........
நிகழ்வு
என்னை
ஈர்க்கவில்லை.

மாறாக,
எதிர்பாரா
நேரத்தில்
அங்கும் இங்குமாக
ஆரம்பிக்கும்
தூரல்
எதிர்பார்ப்பை
அதிகரித்து
வீதியில்
இருக்கும்
நான்
வீட்டுக்கு போய்விடலாம்
என்றுஎண்ணும்முன்னே
என் எண்ணத்தை
மட்டுமல்ல
என்னையும்
முழுவதும்
சுத்தம் செய்யும்
நிகழ்வே........
என்னை
ஈர்த்துவிடுகிறது.

மழையின்
மாறுதல்கள்
மனதையும்
மாற்றிவிடுகிறது.......
.


This entry was posted on 15:06 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: