எங்கோ ஒரு
பேருந்து நிறுத்ததிலோ
கூட்ட நெரிசலிலோ
சந்தித்து,
புன்னகைத்து,
கைக்குலுக்கி,
பரஸ்பரம் விசாரித்து
ஆளே மாறிப்போனதாய்
ஆச்சரியப்பட்டு
மீண்டும் எங்கோவொரு
நிறுத்ததிலோ நெரிசலிலோ
சந்திப்போம் என்ற நம்பிக்கையில்
'பார்க்கலாம்டா மச்சான்'
என்று பிரியும்போதும்
கேட்க வெட்கமாய் இருந்தது
மறந்துபோன அவன் பெயரை.

அவனுக்கேனும் நினைவிருக்குமா
என் பெயர்?


This entry was posted on 15:20 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

    www.bogy.in said...

    தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

  1. ... on Wednesday, April 14, 2010 6:06:00 pm  
  2. Muralee Mukundan , ബിലാത്തിപട്ടണം said...

    Hi..nice to meet you here Balu

    Another magician with a blog..!

  3. ... on Thursday, August 18, 2011 9:00:00 pm