நாம் சேர்க்கப்படவும் இல்லை!
பிரிக்கப்படவும் இல்லை!!

விலகியிருந்தே நேசித்திருப்போம்!!!

























தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் ???

ஏதேன் தோட்டத்தில்
ஏவாள் இல்லாமல் கூட
ஆதாம் வாழ்ந்திருக்க முடியும்
ஆனால் ஆப்பிள் இல்லாமல்
ஒரு நாள்கூட
உயிரோடிருந்திருக்க முடியாது.....
ஜென் கதையொன்று.......

ஆற்றின் இரண்டு கரைகளில் இரு துறவிகள் இருந்தனர். வலதுபுறமிருந்த கரையிலிருந்த துறவி தண்ணீரில் நடந்து காட்டக் கூடியவர். காற்றில் எழுதிக்காட்டக் கூடியவர். இடது புறமிருந்த துறவிக்கு இது போன்ற சித்துகளும் எதுவும் தெரியாது அதனால் அவரிடம் சீடர்கள் வந்து சேர்வது கிடையாது. ஒரு நாள் புதிதாக ஒரு மாணவன் அவரிடம் வந்து சேர்ந்தான். அவன் ஆர்வத்துடன் நீங்கள் ஏன் மாயங்கள் செய்வதில்லை என்று கேட்டான். அதற்கு இடதுபுறமிருந்த துறவி தான் செய்யும் மாயங்களை மற்றவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். உனக்காவது புரிகிறதா பார்ப்போம் என்றபடி. எனக்கு பசியெடுத்தால் சாப்பிடுகிறேன். சாப்பிட்டதும் பசி எங்கே போனது என்று மாயமாகயிருக்கிறது. அது போலவே தாகமாகயிருக்கும் போது தண்ணீர் குடிக்கிறேன். தாகம் எங்கே மறைந்தது என்றே தெரியவில்லை. இவை யாவையும் விட பெரிய மாயம். உறக்கம் வந்த போது நான் உறங்கிப் போய்விடுகிறேன் இந்த மொத்த உலகமே எனக்குத் தெரியாமல் மறைந்துவிடுகிறது. இதெல்லாம் மாயமில்லையா என்று கேட்டார். சீடனுக்கு அவரது அருமை புரிந்து அவரிடத்தில் தங்கிவிடுகிறான்.

(எல்லா இறைதூதர்களும் பசியைப் போக்குவதை தான் முதன்மையான அற்புதமாக நிகழ்த்தியிருக்கிறார்கள். பசியைப் பற்றி பேசாத மதமேயில்லை. பத்து பேர் உண்ணும் அப்பத்தை நூறு பேருக்கு பங்கிட்டு கொடுத்ததும். விருந்தில் தண்ணீரை திராட்சை ரசமாக்கியதும் கிறிஸ்துவின் அற்புதங்கள் என்றால் அதனடியில் பசியுணர்ச்சி தான் பிரதானமாகயிருந்திருப்பதை கவனிக்க வேண்டியிருக்கிறது. தனக்கு கிடைப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்பது ஜீவராசிகள் யாவற்றிருக்கும் பொதுவான வழிமுறை. நிலத்தடியில் ஒடும் தண்ணீரை ஒரேயொரு வேப்பமரம் மட்டும் உறிஞ்சிக் குடித்துக் கொள்வதில்லை. காகம் கைப்பிடி சாதத்தைக் கூட கரைந்து காகங்களை அழைத்துத் தான் சாப்பிடுகிறது. இப்போதும் நாம் நமது பிறந்த நாள். திருமண நாட்களில் மிகச் சிறப்பாக நினைப்பது விருந்தை மட்டும் தான். நல்ல உணவளிப்பது தான் நமது அன்பின் பிரதான வெளிப்பாடாகயிருக்கிறது. ஆயிரம் வார்த்தைகளை விடவும் ஒரு பிடி சோறு அதிக நெருக்கம் உண்டாக்கிவிடக்கூடியது. ஒரு கலாச்சாரத்தை தீர்மானிப்பதில் முக்கியபங்கு வகிப்பது உணவு தான். உணவின் சரித்திரத்தை ஆராயும் போது நாகரீகத்தின் மறுபக்கத்தை அறிய முடிகிறது - எஸ்.ராமகிருஷ்ணன், தீராப்பசி)

எல்லோருக்கும் அவரவர் விருப்பம் போல் வாழவேண்டும் என்று ஆசை இருக்கிறது, எங்கேனும் சமூகத்தில் நம் அமைதியான வாழ்விற்கு பங்கம் விளைவிக்கும் ஏதாவதொன்று நடந்தால் எல்லோரும் ஒவ்வொரு மற்றவரை குற்றம் சொல்கிறோம், விவாதம் செய்கிறோம், மனதின் கோபங்களை, ஆத்திரங்களை, சமூக விமரிசனங்களை, குமுறலை, கவிதையில், எழுத்தில் பதிவு செய்கிறோம். அத்தோடு நம் கடமை முடிந்துவிட்டதா???
நம் தமிழ்ப்பாட்டனார் வள்ளுவரின் குறள் மொழிகளிலிருந்து,

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது (227)
-பட்டினி எனச்சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண்போகாது. தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக் கூடிய கருவூலமாகும்

அற்றார் அழிபசி தீர்த்தல்
அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி (226)
-பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைபிடிப்பதைவிட பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாந் தலை (322)
-இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழவேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது எதுவுமே இல்லை.
சமூகப்பாத்திரத்தில் நமக்கான இடத்தை மனசாட்சியின் ஒப்புதலோடு, சம்மதத்தோடு குறைந்தபட்ச நேர்மையோடு நிறைவாக்கிவிட்டோமா?

நமக்கெல்லாம் உறைக்கவேண்டும் என்பதற்காக,

வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
இங்கும் வாழும் மனிதர்க்கெல்லாம்....

- என்று பட்டினிப் பசியின் கொடுமையை அனுபவித்து உணர்ந்த பாரதி எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறான்.

நாம் உண்மையில் என்ன செய்கிறோம்?
நாம் பட்டினியின்றி சுகமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
அதனால்தான்...
- சிவாஜி 200 கோடிக்கு விற்பனையானதைப் பற்றிச் சிலாகித்துக் கொண்டிருக்கிறோம்.
- நயந்தாராவின் இடுப்பில் சதை வைத்துவிட்டது நமக்கு கவலையாய்- ......................................
இன்னும் .................. நிறைய

நாம் பாரதியை மட்டுமல்ல, காந்தியை மட்டுமல்ல, வள்ளுவரை, புத்தரை, ஏசுவை, நபியை இன்னும் என்னெவெல்லாமோ படிக்கிறோம். சிந்திக்கிறோம் அல்லது அப்படி எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஏதேனும் செய்கிறோமா? சிந்திக்க வேண்டும், உண்மையாய் சிந்திக்க வேண்டும். ஏதேனும் செய்யவேண்டும்.


















































உங்கள் எல்லோருக்கும் ஏமாந்த காகம் கதை தெரியும் இல்லையா? "காக்கா காக்கா, ஒரு பாட்டுப் பாடு என்று தந்திரமான குள்ளநரி கேட்க, கவனமில்லாமல் வாயில் வடை இருப்பது தெரியாமல் அசட்டுக் காகம் வாயைத் திறந்து பாட, வடையும் கீழே விழுந்து விட, நரியும் ஏமாற்றி வடையைப் பெற்றது இல்லையா? இப்போது இந்த சாதுர்யமாகத் தன் மூளையை உபயோகித்த காகத்தின் கதையைப் பார்ப்போமா?


அம்மாக் காகம் அழைத்தது,காக்கா கா,,, கா,,,, கா,,,,

பறந்து வந்தது குழந்தைக் காகம் கரைந்தது கா,,,, கா,,,, கா,,,,,,,

அம்மா சொல்லியது அன்புடன்,

எமாற்றாதே நீ ஒருவரையும்,

ஏமாறாதே, இரு கவனமுடன்,

நீ செய்யும் வேலை எல்லாம்

புத்திக் கூர்மையுடன் இருக்கட்டும் காகா,,,,, காக்கா,,,,,, கா,,,,,,,,

சரியம்மா.

"மகிழ்ந்து போனது குஞ்சுக் காக்கை

ஒரு தின் பண்டக் கடை மேல் பறந்தது

கடையுடன் வடையையும் பார்த்தது

வடை வாங்க ஒரு பையன் வந்தான்

கையில் வாங்கி வடையைப் பார்த்தான்

வடை தவறிக் கீழே விழவும்

குஞ்சுக் காக்கா கொத்திப் பறந்தது

மேலே மரத்தின் கிளையில் அமர

எல்லாம் ரசித்த நரி ஒன்று வர

வடையை அடைய முயன்றது.

காக்கா காக்கா, கீழே பார்

நீ அழகாய்ப் பாட்டுப் பாடுவாயே,

ஒன்று பாடிக் காட்டுவாயா?

""ஓ, பாடுவேனே" என்றபடி

வாயின் வடையைக் காலில் சொறுகி

கா,,, கா,," என்றும் பாட

நரியும் ஏமாந்து திரும்பியது,,,,,,




யாருக்கு விற்க


நிலத்தை


அளக்கிறாய்!!!!




எனக்கும்
புத்தனாக வாழ
ஆசை தான்!!!

என்ன செய்ய
என் பழைய
வாழ்க்கை
சித்தார்த்தனைப் போல
இல்லையே????







பதினாரு வயதிலேயே
எமன்
என் கதையை முடித்து விட்டான்!!!

இறப்பை
எதிர்த்து என்னுடைய
போராட்டங்கள்
தோல்வியின் திசை நோக்கி
இழுத்து செல்லப்படுகின்றன!!

இறுதியாக ஒருயொருமுரை
இழுத்து சுவாசித்தேன்!!

அந்த இரவில்
உறவினர்களோடு
உறங்கிக் கொண்டிருக்கும் பொழுதே
உயிர்போனது
உடல் தனித்து விடப்பட்டது!!

நான் லேசானேன்
காற்றாய் உலாவினேன்!!

எனக்குப் புரிந்து விட்டது
நான்
இறந்து விட்டேன் என்று!

முதன் முதலில்
என்னுடலைப் பார்த்து
'ஓ' வென அழுதது
நான்தான்!

என்
கண்ணீர் மழையின்
கடைசிச் சொட்டும்
விடிவதற்குள் விழுந்து விட்டது
எதனையும் நனைக்காமல்!

என்
குடும்பத்திற்கு
இன்றைய விடியல்
சூரியனில்லாமல்!

நான்
உறங்கிக் கொண்டிருக்கின்றேன்
என்று வழக்கம்போல
அம்மா தன் வேலைகளைச்
செய்யத் துவங்கிவிட்டாள்!


என் முகத்தில்
தண்ணீர் தெளித்துவிட்டு
நான் அடிப்பேன் என்று
வேகமாய் ஓடுகிறாள் என் தங்கை!

ஐயோ!!
நான் என் உடலில்
இல்லையென்று யார்
கண்டுபிடிக்கபோகிறார்கள்??

எனக்குத்
துக்கம் என்
தொண்டையை அல்ல
என்னையே அடைத்துவிட்டது!

எப்பொழுதும் போல
என்னைத் திட்டிக் கொண்டே
அலுவலகத்திற்கு
புறப்பட்டுக் கொண்டிருந்த
என் மாமா
தங்கையிடம் சொல்கிறார்,
"பாரும்மா பாரு!
நான் நாய் மாதிரி
கத்திக்குட்டு இருக்கேன்
ஒன்றுமே கேட்காத மாதிரி
பிணம் போலத் தூங்கிட்டு இருக்கான்"!!

எனக்கு
என்ன சொல்வது
என் மூச்சு என்னிடம் இல்லை!


அம்மா, மாமா
உண்மையிலேயே நான்
பிணமாகவே கிடக்கிறேன்!

'பிணம்' என்றது
என் தங்கையின்
ஆறாம் அறிவைத் தூண்டியது??

ஓடி வந்தால்! உற்று நோக்கினாள்
உடலை ஒரு கணம்
அது அசைவற்றுக் கிடந்தது!!

ஈக்கள்
இமைகளை மொய்ப்பதைக் கண்டு
இடிந்து விழுந்தாள்
அண்ணா என்று
அலறியபடியே!

தன் மார்பிலும் வயிற்றிலும்
அடித்துக்கொண்டு - என் அம்மா
விழுந்து விழுந்து அழுகிறாள்!


தங்கையோ அறிவியல்
அறிந்தவள் - அதனால் தான்
என் இதயத்தில்
கைவைத்து குத்தலானாள்!

பாவம்
அவள் முயற்சி
பிணத்திடம் எப்படிப் பலிக்கும்!

ஓடோடி வந்த என் மாமா
உடலைதன் மார்போடு
சேர்த்து வைத்து
'ஓ' வெனக் கதறியழுதார்!


உயிரோடு நானிருக்கையில்
வார்த்தையால் சுட்டவர் - இன்று
என் உடலுக்குக் கண்ணீர்
ஒத்தடம் கொடுக்கிறார்!

வீட்டின் சுவர்கள் எல்லாம்
மௌனமாய் நின்றபடி
மரண அஞ்சலி செய்கின்றன!

உயிரோடு நான் எழுந்து
ஓர் இன்ப அதிர்ச்சி
தர வேண்டும் என எண்ணுகிறேன்!

என்
முயற்சிகள் தோல்வியடைய வில்லை
நானே தோற்றுப்போனேன்!


அக்கம் பக்கத்தார்
அலறல் கேட்டு
வந்துவிட்டார்கள்!

என் சாவுமணியைத் தெரியப்படுத்த
தூரத்து உறவினர்களுக்கெல்லாம்
தொலைப்பேசி மணி
துக்கத்தில் அலறியது!


தாயின் புலம்பல்!
மாமாவின் மருகல்!
தங்கையின் தேம்பல்!

என் மீது இவ்வளவு பற்றா?
என் இதயத்திற்கு குளிங்கி அழத்திராநியில்லை!


காற்றை இருந்தவன்
கனத்துப் போனேன்!


சின்னவயதில் ஏறிவிளையாடிய
அதே கட்டில்
ஏன் உடலைக் கிடத்தினர்!

உறவினர்கள் ஒவ்வொருவராய்க்
கடமைக்காக
வந்து கொண்டிருந்தார்கள்!

பலருக்கு என் மரணம்
விடுப்பு எடுக்க
வசதி செய்து கொடுத்தது!

நான் நீரூற்றி
வளர்த்த தென்னையிலிருந்து
தயாராகிக் கொண்டிருந்தது
எனக்கான பாடை!

நண்பர்களுக்கு
செய்திபரவியது!
காற்றைத் திரண்டு வந்தனர்!

இறந்துபோன
ஏன் உடலில்
இறந்துகொண்டிருக்கும் பூக்கள்!

ஒரு
ஆண் மலர்களால்அலங்கரிகப்படுவது
இரண்டு முறை தான்!

ஒன்று திருமணம்,
ஒன்று மரணம்!

எனக்கு இரண்டாம் முறையே
முதல் முறை ஆயற்று!

சின்ன சின்ன குழந்தைகள்
எல்லாம் சோகமின்றி
விளையாடிக்கொண்டிருந்தன!

அவர்கள் அறிந்திருந்தனர் போலும்
பிறப்பைப் போல
இறப்பும் இயல்பு தானென்று!




மழையில் நனைந்து கொண்டே
வீட்டுக்கு வந்தேன்
"குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே"
என்றான் அண்ணன்
"எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே"
என்றாள் அக்கா

"சளி பிடிச்சிகிட்டு
செலவு வைக்கப்போற பாரு"
என்றார் அப்பா

தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினால் அம்மா
என்னையல்ல;
மழையை!!!

எங்கோ ரசித்தது...









என் பிரிய அம்முவின் நினைவில்
பழைய நினைவுகளைப்
பகிர்ந்துக் கொள்ள
புதிய தோழி எனக்குத் தேவை!

உலகப்போக்கு
உறவுகளின் போக்கு
ஒன்றுவிடாமல் பேசுவோம்!

என்
ரகசியங்களின்
கிடங்காக நீ கிட!

உன்
கவலைகள் களையும்
கரமாக என் இதயம் இருக்கும்!

நிறைகளை மட்டும் பேசும்
காதலர்களைப் போல் இல்லமால்
குறைகளைப் பகிர்ந்துக் கொள்ளும்
நண்பர்களாய் இருப்போம்!

உன்
குறைகளையெல்லாம்
ஒன்றுவிடாமல் கூறு
ஏனென்றால்?

நான்
உன் காதலன் அல்ல!
அலங்காரம் வேண்டாம்
அப்படியே
அழுக்கு 'நைட்டியுடன்' வரலாம்
ஏனென்றால்?

நான்
உன் காதலன் அல்ல!

இருவரும்
திருமணம் செய்து கொள்ளலாம்
வேறொருவரை!
உன்
கணவனோடு வா!
என் மனைவியோடு வருகிறேன்!
நால்வரும்
நட்பு பாராட்டுவோம்!

நட்பு
காதலைவிட கண்ணியமானது!
உயிரின்
உயிர்ப்பு நிலையது!




மேஜிக்கின் தந்தையென்று அழைக்கப்படும் மறைந்த பி.சி. சர்கார் அவர்களுக்கு சமர்ப்பணம்!!!



மேஜிக் என்றால் என்ன???



மேஜிக் ஒரு உயர்தரமான பொழுது போக்குக் கலை. ஒருவர் மனமும் புண் படாமல், தீமை ஏற்படாமல், துரோகம் செய்யாமல், ஏமாற்றி பொருள் பறிக்காமல் அனைவரையும் மகிழ்விக்கும் ஒரு உன்னத கலை மேஜிக்.

யாரெல்லாம் மேஜிக் பயிலலாம்???
மேஜிக்க்கில் ஆர்வம் உள்ள அனைவரும் (வெறும் ரகசியங்களை மற்றும் தெரிந்து கொள்ள அல்ல) !!!!

எப்படி ஒரு மேஜிக் நிபுணர் ஆவது ??

  1. மேஜிக் என்றால் என்ன என்று முதலில் புரிந்து (understanding) வேண்டும்.
  2. பின்பு எந்த ஒரு கலையைப் போன்று முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.
  3. அதன் பிறகு, எல்லாம் உங்கள் பயிற்சி, பயிற்சி, பயிற்சி தான்.

மேஜிக் நிபுணராக என்ன தேவை??
  1. திடமான தன்னம்பிக்கையும், மன உறுதியும் அவசியம்.

  2. சஞ்சலப் புத்தி இருக்கக் கூடாது.

  3. அழகாகவும், கவர்ச்சியாகவும் பேச தெரிந்து இருக்க வேண்டும்.
  4. கண்களை விட கைகள் மிக வேகமாக செயல் பட வேண்டும்.

  5. சபைக் கூச்சம் கூடவே கூடாது.

  6. நல்ல ஞாபக சக்தி வேண்டும்.


மேஜிக் கற்பதால் என்ன பயன்??

நீங்கள் உண்மையிலேயே மேஜிக்கில் ஆர்வம் கொண்டிருந்தால்,


  1. மேலே கூறிய 6 குணங்களும் தானாகவே வந்து விடும்.

  2. உங்கள் personality மெருகேரும்.

  3. உங்கள் communication skills மெருகேரும்.

இனி மேஜிக் கற்கலாம்!!!


அதற்கு முன் முக்கியமா சில விதிகள்:



  1. மேஜிக்கின் ரகசியங்களை மேஜிக்கில் உண்மையான ஆர்வம் இல்லாத யாருடனும் பகிர கூடாது.

  2. ஒரே மேஜிக்கை ஒரே ரசிகர்களுக்கு செய்து காட்ட கூடாது (In Magic, there is no ONCE MORE always ONE MORE)

  3. நீங்கள் செய்ய போகும் மேஜிக்கின் முடிவை முன்பே சொல்கூடாது, அது மேஜிக்கின் சுவாரசியத்தைக் குறைத்து விடும்.

  4. ஒரு மேஜிக்கை செய்து கட்டும் முன் பல தடவை நன்றாக பயிற்சி செய்ய வேண்டும்.

எல்லாக் கலைகளைப் போல மேஜிக்கும் ஒரு எல்லை கிடையாது. கலையைக் கற்றவர்கள் கற்பனைக்கும், திறமைக்கும் ஏற்ப புதுப் புது மேஜிக்குகளை உருவாக்கிக் கலை அபிவிருத்தி அடைய உதவி செய்யலாம். அது அவருக்கும் கலைக்கும் பெருமை சேர்க்கும்.

தொடரும்......



Just Try this stuff

Don't even think about using spell check!!!!!!!!



fi yuo cna raed tihs, yuo hvae a sgtrane mnid too.

Cna yuo raed tihs? Olny 55 plepoe out of 100 can.


i cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdanieg.

The phaonmneal pweor of the hmuan mnid, aoccdrnig to a rscheearch

at Cmabrigde Uinervtisy, it dseno't mtaetr in waht oerdr the ltteres in a wrod are,

the olny iproamtnt tihng is taht the frsit and lsat ltteer be in the rghit pclae.

The rset can be a taotl mses and you can sitll raed it whotuit a pboerlm.

Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef,

but the wrod as a wlohe. Azanmig huh? yaeh and I awlyas tghuhot slpeling

was ipmorantt ! if you can raed tihs forwrad it.


ONLY FORWARD IF YOU CAN READ THIS


செல்போனில் சரியான எண்ணை அழுத்தாமல் தவறாகிவிட்டால் செல்போன் தேவதையிடமிருந்து இந்தப் பதில் வரும்

"This is not the valid no. please check the no. u have dialled."

இப்ப இதே தேவதை சென்னைத் தமிழ், கோவைத்தமிழ் ,ஈழத்தமிழ் ,தஞ்சை தமிழ் , மதுரை தமிழ் , நெல்லை தமிழ் இப்படி எல்லா வகையான தமிழிலும் இன்னமும் விட்டுப்போன மண்வாசனைத் தமிழிலும் பேசினால் எப்படியிருக்கும்னு சின்ன கற்பனை..

நெல்லைத் தமிழ்
ஏல எண் சரியா இருக்கான்னு பாருல.. நீ போட்ட எண் செல்லாதுல..எடுபட்ட பயல.

கன்னியாகுமரி தமிழ்
நீங்கள் சுழற்றிய எண்கள் தற்சமயம் உபயோகத்தில் இல்லை.தயவு செய்து எண்களை சரிபார்க்கவும் நன்றி.....

கோவைத் தமிழ்
ஏனுங்க நீங்க போட்ட நம்பர் தப்புதானுங்களே.. தயவு செய்துங்க எண்ணைங்க சரி பாருங்கங்க..!

யாழ் தமிழ்
இஞ்சாருங்கோ நீங்கள் கூப்பிட்ட எண் பிழை, இலக்கம் சரியா எண்டு பார்த்து திரும்ப கூப்பிடுங்க சரியே

சென்னை தமிழ்
அடங் உன் மூங்சில என் பிச்சாங்கைய வைக்க நம்பரை சரி பாருமே. ராங் நம்பரை போட்ட ராங்க போயிரும்

பாலக்காடு தமிழ்
யேய்... நீங்க் சொழற்றின எண்ணெல்லாம் இப்போதைக்கு உப்யோகத்துல இல்ல கேட்டியோ தயவுபண்ணி சரி பாத்துக்கோ ஆமா?

வட ஆற்காடு தமிழ்
டேய் நாயே, நம்பர ஒழுங்கா பாத்து போடுடா, தப்பு நம்பர போட்டுகீரபாரு...

அப்புறம் நீங்க உங்க தமிழில் சொன்னா எப்பயிருக்கும்னு மண்வாசனை மாறாம சொல்லுங்க:

இப்ப உங்க தமிழில் ஆரம்பியுங்க மக்களே...










அலைபேசியில் பேசுவதற்கும் சில இங்கிதங்கள் இருக்கின்றன.

நேரில் பார்த்துப் பேசும் பழக்கம் குறைந்துபோய் தொலைபேசியிலேயே முக்கியமான, முக்கியமில்லாத பல விஷயங்களைப் பேசி முடித்துக்கொள்ளும் ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். ஆனால் நம்மில் பலருக்குத் தொலைபேசியைப் பயன்படுத்துவது பற்றியோஅதில் பேசுவது பற்றியோ அடிப்படையாக சில விஷயங்கள் தெரியவில்லை.

நம்மில் பெரும்பாலானவர்கள் நேரில் பேசுவது போலவே தொலைபேசியிலும் பேசுகிறோம்;அல்லது தொலைபேசியில் முகம் தெரியாது என்கிற தைரியத்தில் வேறு மாதிரி அணுகுமுறையுடன் பேசுகிறோம். தொலைபேசிக்கென்று சில அடிப்படையான தன்மைகளும் அதில் பேசுவதற்கென்று சில அடிப்படையான விஷயங்களும் இருக்கின்றன.

நாம் தொலைபேசியில் பல வகை மனிதர்களுடன் பேசுகிறோம். எல்லோருடனும் பேசும்போது அடிப்படையில் ஒரு விஷயத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தொலைபேசியை இயக்கி ‘ஹலோ’ சொல்லும்போது ஒரு புன்னகையுடன் சொல்லுங்கள். நீங்கள் புன்னகைப்பது எதிரில் உங்களுடன் உரையாடுபவர்களுக்குத் தெரியும் என்ற நம்பிக்கையுடனேயே செய்யுங்கள் அவர்களுக்கு நிச்சயம் தெரியும் என்று என் அனுபவத்தில் தெரிந்த உண்மை. சில சமயங்களில் மன அழுத்தம் காரணமாக நான் புன்னகைக்காமல் ‘ஹலோ’ சொன்னால் எனது பல நண்பர்கள் எளிதாக கண்டுபிடித்துவிடுகிறார்கள். ‘என்ன டல்லா இருக்கீங்க’ என்ற கேள்வி வரும். யாருக்குத் தெரியும், உங்கள் புன்னகை, மன அழுத்தத்தில் இருக்கும் யாரையாவது உற்சாகப்படுத்தலாம்.

தொலைபேசியில் நீங்கள் அழைத்துப் பேசும்போது கடைப்பிடிக்க வேண்டிய இரண்டாவது அடிப்படையான விஷயம், எதிரில் இருப்பவர் உங்களுடன் பேசும் நிலையில் இருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்வது. அது உங்கள் அலுவலக மேலதிகாரியாக இருந்தாலும் சரி, உங்கள் நண்பராக இருந்தாலும் சரி.

உங்கள் நண்பராக இருப்பதாலேயே அவர் எந்த நேரமும் உங்களுடன் அரட்டை அடிக்கத் தயாராக இருப்பார் என்று நினைத்துவிடாதீர்கள். அதனால் எப்போதுமே ‘ஹலோ’விற்குப் பிறகு ‘பிஸியாக இருக்கிறீர்களா, இப்போது பேசலாமா’ என்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

அடுத்ததாக, ஒரு அழைப்பில் இருக்கும்போது வேறு வேலை செய்வதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். இரண்டு விஷயங்களிலுமே உங்கள் கவனம் சிதற வாய்ப்புண்டு. அப்படியே அவசியம் வேறு வேலை செய்யும் நிலை இருந்தால் தொலைபேசி அழைப்பை கட் செய்துவிடுங்கள். உங்கள் வேலை முடிந்த பிறகு மீண்டும் அழைத்துக் கொள்ளலாம்.


செல்லில் பேசும்போது கத்திப் பேசுவதையும் உரக்கச் சிரிப்பதையும் முழுவதுமாகத் தவிர்த்துவிடுங்கள். அது உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மத்தியில் உங்கள் நம்பகத் தன்மையைக் குறைத்துவிடும்.
அலுவலக மேலதிகாரியுடன் பேசும்போது பதற்றத்தைக் காட்டாதீர்கள், அடிக்கொரு முறைசார் / மேடம் என்று கூப்பிடுவதைத் தவிருங்கள். அது உங்களைத் தன்னம்பிக்கையற்றவராகக் காட்டக் கூடும்.


தொலைபேசியில் கோபப்பட்டோ கடிந்தோ பேசாதீர்கள். நீங்கள் நேருக்கு நேராகப் பேசுவதைவிடத் தொலைபேசியில் கோபமாகப் பேசும்போது அது அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். உங்கள் முகம் தெரியாதது ஒரு காரணமாக இருக்கலாம்.


நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள், மேலதிகாரி தவிர நமக்குப் பல விதமான அழைப்புகள் வரக் கூடும். க்ரெடிட் கார்டு எடுக்கச் சொல்லி, லோனுக்கு அப்ளை பண்ணச் சொல்லிப் பல டெலிமார்க்கெட்டிங் நபர்கள் நமக்குத் தொலைபேசியிலேயே தொந்தரவு தரக்கூடும். உங்கள் மறுப்பையோ இயலாமையையோ சின்ன புன்னகையுடனேயோ சொல்லுங்கள். எரிந்து விழுவதால் உங்களுக்கு மட்டுமல்ல அவர்களும் மூடு கெட்டுப் போகும்.


குடும்ப நிலை காரணமாகவோ அவர்களுடைய பின்னணி காரணமாகவோ 1000க்கோ 2000க்கோ அப்படிஒரு வேலையில் சேர்ந்து ஒரு நாளைக்கு பலருடைய கோபதாபங்களையும் சேர்த்து சம்பாதிக்கும் அவர்களிடம் நாமாவது கொஞ்சம் இனிமையாக நடந்துகொள்வோமே!


அப்புறம் உங்கள் செல்போனின் ஒலியளவு (வால்யும்). சிலருக்கு செல்லில் அழைப்பு அல்லது எஸ்.எம்.எஸ். வந்தால் ரிங் டோன் இருபது மீட்டருக்குக் கேட்கிறது. இவ்வளவு சத்தம் தேவைதானா? நாமும் சத்தம் போடக் கூடாது, நம்முடைய செல்போனும் சத்தம் போடக் கூடாது.


இத்தனை இங்கிதங்களையும் பின்பற்றினால் மற்றவர்கள் மத்தியில் நமக்கு நல்ல இமேஜ் இருக்கும். அதோடு நமக்கு போன் வந்தால் யாரும் கடுப்பாக மாட்டார்கள்!






நீ யாருக்கோ
செய்த மெளன
அஞ்சலியைப் பார்த்ததும்…
எனக்கும் செத்துவிடத்
தோன்றியது ….
***************************************





எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும்
உன்னை
மறக்க...



***************************************




உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள்....
***************************************






என்னை தான் அம்மா
அடிப்பாள்....
ஏனோ
அவள் முகத்தில்
வலி தெரியும்.....!

கடைசியில்
நிச்சயம் முத்தம்
கிடைக்கும்.,

ஏனோ
இன்னோரு தரம் அடிக்க மாட்டாளா- என்று
மனசு ஏங்கும்.....

ஒவ்வொரு பிறந்தநாளும்
அம்மாவின்
இனிப்போடு தான்
பிறக்கும்....

கடைசிவரை கேட்கவே இல்லை
அம்மாவின் பிறந்த நாளை.....!