கேட்கிறாயே பெண்ணே!


என்னையே விலையாக கேட்கிறாயே???


இருளில் அலைந்தேன்,


நீரில் மிதந்தேன்,


பயமில்லாமல்,


உன்னுள் இருக்கும் வரை.


என் உடல்,


என் உயிர்,


என் உணவு,


எல்லாம் கொடுத்தாய்,


நான் பெண் என்று அறியும் வரை.


எல்லாம் கொடுத்துவிட்டு,


என்னையே விலையாக கேட்கிறாயே!


நீயும் பெண் என்பதை மறந்தாயோ?


சமூகம் கேட்கும்,'ஆயிரம் கேள்விகள்'


அனைத்தும் பதில் சொல்லத் தகுதியற்றவை!


உன்னால் உருவாகி,


உன்னுள் வடிவாகி,


உன்னிடம் பிறப்பதால்


நான்,


உன்னுடையவள் அல்ல,


என் உயிர்


என் உரிமை மட்டுமே.


உன் கருவறை,


என் கல்லறையாகி விட வேண்டாம்.


தூணிலிருந்து வெளிபட்ட தர்மம்


அதர்மத்தை அழித்ததுப் போல்,


உன்னிலிருந்து வெளிப்பட்டு


நான் அழிப்பேன்


இந்த சமூக அவலங்களை.


என்னை பிறக்க விடு.




This entry was posted on 18:07 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

    Suresh said...

    Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan.

    Kandipa ungaluku pidikum endru nambugiran.
    http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html

    கருணாநதி அரசு மருத்துவமனையில் ?
    அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,
    உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.

  1. ... on Monday, March 02, 2009 5:39:00 pm  
  2. Anonymous said...

    கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது...

  3. ... on Saturday, March 14, 2009 5:40:00 pm